அமெரிக்காவின் செயலால்... இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு நாடுகளில் வியாபிக்கலாம் என அச்சம்
ஈரானிய ஆதரவு போராளிகள் குழுவினர் பயன்படுத்தும் சிரியாவில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கை அமெரிக்க வான்படை தாக்கி அழித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில்
குறித்த சம்பவத்தால் தற்போது இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு நாடுகளில் வியாபிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க வான்படை முன்னெடுத்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
@getty
அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் ஈரான் ஆதரவுப் படைகளால் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகள் குறைந்தது 40 முறை தாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு அமெரிக்க ராணுவத்தின் இரு F-15 போர் விமானங்கள் பழிவாங்கும் வகையில் சிரியாவில் ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
பலத்த குண்டு வீச்சு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் நடந்த பகுதியானது ஈரானின் புரட்சிகர படையினர் பயன்படுத்தும் இடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அமெரிக்கப் படைகளுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த குண்டு வீச்சு நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா தயங்காது
மேலும், அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் ஈரான் ஆதரவுப் படைகளால் 45 அமெரிக்க ராணுவத்தினருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அமெரிக்க துருப்புகளுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Credit: Alamy
தாக்குதல் நீடிக்கும் என்றால், எமது மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயங்காது என்றார். இந்த நிலையில் தான், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் வியாபிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும், காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் ஈரான் தமது பிராந்திய குழுக்களை வைத்து தாக்குதல் தொடுப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |