போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல்
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த 3 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதை தெற்கு கட்டளை மையம்(SOUTHCOM) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் ஏப்ரல் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த தடுப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
SOUTHCOM சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில், இந்த தாக்குதலை Joint Task Force Southern Spear மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
On April 26, at the direction of #SOUTHCOM commander Gen. Francis L. Donovan, Joint Task Force Southern Spear conducted a lethal kinetic strike on a vessel operated by Designated Terrorist Organizations. Intelligence confirmed the vessel was transiting along known… pic.twitter.com/br2znnUM1x
— U.S. Southern Command (@Southcom) April 27, 2026
அத்துடன் ஜெனரல் பிரான்சிஸ் எஸ். டொனோவன் இந்த நடவடிக்கைகளுக்கான நேரடி உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது அமெரிக்க இராணுவ அதிகாரிகள் யாருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |