இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானம்!
இலங்கையில் நேற்று முதல் பல போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இச்சம்பவம் தொடர்பாக உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
வொஷிங்கடனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை மக்கள் முகங்கொடுத்து வரும், உணவு, மின்சாரம், மருந்து மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட கால பொருளாதார கொள்கையினை வகுத்து இதற்கான தீர்வினை பெறுமாறும், அமைதியான வகையில் இடம்பெற்ற போராட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடன் சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ” அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.