ஆப்கானிஸ்தான் விவகாரம்... பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை அறிவித்த அமெரிக்கா
அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில், அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது.
வெளிப்படையான போர்
பாகிஸ்தான் தனது சமீபத்திய இராணுவத் தாக்குதலில் 274 ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

காபூல் மோதல் தொடர்பில் எச்சரித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தங்களின் இராணுவம் எந்தவொரு ஆக்கிரமிப்பு லட்சியங்களையும் நசுக்கும் திறன் கொண்டவை என்றார்.
இதனிடையே, எங்களது பொறுமை எல்லையை எட்டிவிட்டது என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்து, தற்போது இரு தரப்பினருக்கும் இடையே வெளிப்படையான போர் நடந்து வருவதாக எச்சரித்தார்.
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா
முக்கிய டோர்காம் எல்லைக் கடவைக்கு அருகில் புதிதாக துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானின் காந்தஹார் பகுதியில் ரோந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஆயுதப்படைகள் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள முழுமையாக தயாராக உள்ளன, மேலும் தகுந்த பதிலடி கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் இரவோடு இரவாக கடுமையாக அதிகரித்தன, இரு தரப்பினரும் பெரும் இழப்புகளைக் கூறி, சர்ச்சைக்குரிய எல்லையில் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கினர்.
உரிமைக்கு ஆதரவு
இஸ்லாமாபாத் மற்றும் காபூலில் உள்ள தலைவர்கள் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகளை பரிமாறிக் கொண்ட போதிலும், காபூல் மற்றும் காந்தஹாரில் வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வியாழக்கிழமை டுராண்ட் பாதையில் மேற்கொள்ளப்பட்ட பதிலடி நடவடிக்கைகளில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு தளங்களும் 19 நிலைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலும் தாலிபான் தாக்குதல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பாகிஸ்தானின் உரிமைக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |