வெள்ளிக்கிழமை முதல் எகிப்து எல்லை வழியாக காசாவுக்கு உதவி வழங்க அனுமதி
எகிப்தில் இருந்து காசா மக்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார்.
எகிப்து-காசா எல்லையைத் திறப்பதற்கும், முதற்கட்டமாக 20 டிரக்குகளில் உதவிகளைக் கொண்டுவருவதற்கும் எகிப்துடன் உடன்பாடு எட்டப்பட்டதாக பிடன் அறிவித்தார்.
ஹமாஸ் அவர்களைக் கைப்பற்ற முயன்றால், உதவி வரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் என்றும் பிடென் எச்சரித்தார். காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது செவ்வாய்க்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது, உலகளாவிய எதிர்ப்புகளைத் தூண்டியது.
பின்னர், டெல் அவிவ் வந்த பிடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப் பிறகு உதவிகளை கொண்டு வர ஒப்பந்தம் ஏற்பட்டது.
அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதை அடுத்து, காசாவிற்கு தண்ணீர், உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது. இந்த புதிய முடிவு, துயரத்தில் உள்ள 23 லட்சம் பேருக்கு நிவாரணம் அளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Aid to Gaza Strip, Egypt agrees to reopen Gaza border to aid as protests rock Middle East, United States of America