அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து சரமாரி ராக்கெட் தாக்குதல்! பிரபல நாட்டில் தொடரும் பயங்கரம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு ராக்கெட்டுகளால் குறிவைக்கப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் கூறியது.
இந்த தாக்குதல் காயமடைந்தவர்கள் குறித்து உடனடியாக எந்த தகவலம் வெளியாகவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன் மேற்கு ஈராக் மாகாணமான அன்பரில் அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப்படைகள் தங்கியிருக்கும் இராணுவ விமானத் தளம் மீது 6 ராக்கெட்டுகள் தாக்கியது நினைவுக் கூரத்தக்கது.
இதனைத்தொடர்ந்து இன்று பாக்தாத்தின் பசுமை மண்டலத்தை இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, ஈராக்கில் அமெரிக்க படைகள் இருக்கும் இராணுவத் தளங்கள், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் பலமுறை மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் ஈரானின் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகளால் நடத்தப்பட்டதாக அமெரிக்க கூறுகிறது.