அமெரிக்காவில் 3 மகளை கடத்தி கொன்ற முன்னாள் ராணுவ வீரர்? நாடு தழுவிய தேடுதல் வேட்டை!
அமெரிக்காவில் மகள்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் முன்னாள் ராணுவ வீரருக்கு நாடு தழுவிய தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
தேடுதல் வேட்டை
தமது மூன்று இளம் மகள்களை கடத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 32 வயதான முன்னாள் ராணுவ வீரர் டிராவிஸ் டெக்கரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திங்கட்கிழமை சிறுமிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உள்ளூர் காவல்துறை, FBI மற்றும் அமெரிக்க மார்ஷல்கள் சம்பந்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டை மேலும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறுமிகளின் தாயார் அவர்களைக் காணவில்லை எனத் தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஈவ்லின் (9), பெய்டின் (8) மற்றும் ஒலிவியா (5) என அடையாளம் காணப்பட்ட அவரது மகள்கள், தங்கள் தந்தை டிராவிஸ் டெக்கருடன் திட்டமிடப்பட்ட மூன்று மணிநேர சந்திப்பிற்குப் பிறகு இரவு 8 மணிக்கு வீடு திரும்ப வேண்டியிருந்தது.
இருப்பினும், டெக்கரின் கைபேசிக்கு அழைத்தபோது அது நேரடியாக வாய்ஸ்மெயிலுக்குச் சென்றது, மேலும் சிறுமிகள் திரும்பி வரவில்லை.
அதிகாரிகள் எச்சரிக்கை
"விரிவான" ராணுவப் பயிற்சி பெற்றவர் என அதிகாரிகளால் விவரிக்கப்படும் டெக்கர், பொதுமக்களுக்கு "குறிப்பிடத்தக்க ஆபத்து" விளைவிக்கக்கூடியவர் எனக் கருதப்படுகிறார்.
அவர் ஆயுதம் ஏந்தியுள்ளாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தொலைதூர, அடர்ந்த வனப்பகுதியில் நுணுக்கமாக அவரை தேட ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |