8 வயது சிறுவனின் விளையாட்டு செயல்... சோகத்தில் முடிந்த அமெரிக்க சம்பவம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 8 வயது சிறுவன் துப்பாக்கியால் விளையாட்டாக சூட்டதில் 1 வயதுடைய பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த பிறகு, அமெரிக்காவில் துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
அத்துடன் சில தினங்களுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அமெரிக்காவின் துப்பாக்கி பயன்பாட்டை நெறிப்படுத்தும் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 8 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியால் சூட்டதில் 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ரோடரிக் ராண்டால் (Roderick randall) தனது மகன், பெண் தோழி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் விடுதி ஒன்றிக்கு சென்றுள்ளார்.
அப்போது ராண்டால் மற்றும் அவரது தோழி வெளியே சென்ற போது, ராண்டாலின் 8 வயது சிறுவன் அலமாறியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டாக சுட்டுள்ளார், அது அருகில் இருந்த பெண் குழந்தையின் உடலை துளைத்து கொண்டு சென்றதில் அந்த ஒற்றை வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் இறந்த குழந்தையின் அருகில் இருந்த மற்றொரு குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: புடின் பெண்ணாக பிறந்து இருந்தால்...பிரித்தானிய பிரதமர் தெரிவித்த பரபரப்பு கருத்து!
இதனைத் தொடர்ந்து தனது மகனை துக்கிக் கொண்டு ராண்டல் தப்பி ஓடிய நிலையில், அவர் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்து இருந்தது மற்றும் கவனக்குறைவாக செயல்பட்டது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராண்டலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.