தாயாருக்கு கடைசியாக மாணவி அனுப்பிய குறுந்தகவல்! ரஷ்யாவில் மர்மமான முறையில் காணாமல் போன பெண்
ரஷ்யாவில் அமெரிக்கா மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் தன் தாயாருக்கு இறுதியாக குறுந்த தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது
தற்போது தெரியவந்துள்ளது. ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் அமெரிக்காவை சேர்ண்ட கேத்தரீன் செரவ் என்ற 34 வயது பெண் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார். இதனால் இது குறித்துப் பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து விசரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் அறிமுகம் இல்லாத நபருடன் காரில் சென்றுள்ளார். அதில் செல்லும் போது, தன்னுடைய தாயாருக்கு, கடைசியாக தனது தாயாருக்கு நான் கடத்தப்படவில்லை என நம்புகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
எனினும், மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக கார் காட்டுக்குள் சென்றுள்ளது என கூறப்படுகிறது. காட்டில் உள்ள டவரில், செரவின் செல்போன் அழைப்பு சென்றது பதிவாகி உள்ளது.
இதுபற்றி 40 வயதுடைய நபர் ஒருவரை விசாரணை குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்து உள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கடந்த காலங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என தெரிவித்துளனர்.