அமெரிக்க துணை ஜனாதிபதியின் தென் கொரிய சுற்றுப்பயணம்: பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது வட கொரியா
கிழக்கு கடல் பகுதியில் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சுற்றுப்பயணம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா குற்றச்சாட்டு.
அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா கிழக்கு கடல் பகுதியில் ஏவியதாக புதன்கிழமை தென் கொரியாவின் கூட்டுப் படை தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியா-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நாளுக்கு முன்னதாக, வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் அடையாளம் அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருப்பதாக தெரியவந்துள்ளது.
EPA
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்,(Kamala Harris) வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் எனவும், அங்கு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை பகுதியான கொரிய இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) பார்வையிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் வருகை தொடர்பான அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்னதாக, வட கொரிய ஆட்சியை கவிழ்ப்பதற்காக கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருவதாக வட கொரியா அமெரிக்காவை குற்றம் சாட்டி இருந்தது.
வட கொரியா இந்த ஆண்டு மட்டும் 18 பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு கப்பல் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக கூட்டுப் படை தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணி எலிசபெத்திற்கான அரச துக்கம் நிறைவு: உடனடியாக மேகன் மார்க்கல் வெளியிட்ட அறிவிப்பு
கடந்த வார இறுதியில் வட கொரியா ஜப்பான் கடலில் அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.
REUTERS