அல்-கொய்தாவின் மூத்த தலைவரை கொன்றுவிட்டோம்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிரியாவில் அல்-கொய்தாவின் மூத்த தலைவர் Abdul Hamid al-Matar-ஐ ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய கொன்றதாக அமெரிக்கா இராணுவம் அறிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் தெற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய Command செய்தித்தொடர்பாளர் இராணுவ மேஜர் John Rigsbee அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் Abdul Hamid al-Matar கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் MQ-9 ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
al-Matar-ன் கொலை, அல்-காய்தாவின் மேலதிக சதித்திட்டம் மற்றும் அமெரிக்க குடிமக்கள், எங்கள் கூட்டாளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் உலகளாவிய தாக்குதல்களை நடத்தும் திறனை சீர்குலைக்கும்.
அல்-கொய்தா சிரியா, ஈராக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளை அச்சுறுத்துவதற்கு சிரியாவை ஒரு தளமாக பயன்படுத்துகிறது என John Rigsbe கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன் தெற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ராக்கெட் மற்றும் ஆளில்ல விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த வீரர்கள் யாரக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.