ஈரான் துறைமுக முற்றுகையை நீக்கிய அமெரிக்கா - வணிகக் கப்பல்களுக்கு சுதந்திரப் பயணம்
அமெரிக்கா, ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை முழுமையாக நீக்கியுள்ளது.
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வழங்கிய நேரடி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ட்ரம்ப் ஈரான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த முற்றுகையை நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் கப்பல்களுக்கு எந்தவித தடையும் இல்லை என CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படை கப்பல்கள், ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அருகிலேயே இருப்பதாகவும், ஆனால் எந்தவித தடையும் விதிக்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்
Today, U.S. forces lifted the blockade on all maritime traffic entering and exiting Iranian ports and coastal areas, in accordance with the President's direction. American forces are not impeding the transit of vessels to or from Iranian ports. All U.S. military blockade…
— U.S. Central Command (@CENTCOM) June 18, 2026
இந்த முடிவு, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஈரான் கடல்பகுதிகளில் வணிகக் கப்பல்கள் எதிர்கொண்ட சிக்கல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியை அளிக்கும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை குறைத்து, பிராந்திய அமைதிக்கான முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |