டிக்கெட் வாங்காமலே 120 முறை விமான பயணம் செய்த நபர் - எப்படி தெரியுமா?
6 ஆண்டுகளாக டிக்கெட் எடுக்காமல் விமான பயணம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் பொதுப்போக்குவரத்தில், விமான பயணங்கள் அதிக விலை உள்ளதாக உள்ளது. குறைந்த பயண தூரம், குறைந்த விமானங்கள் போன்ற பல்வேறு காரணங்களால், ரயில் பேருந்து போன்ற மற்ற பயணங்களை விட அதிக விலையுள்ளதாக உள்ளது.
அதேவேளையில், ரயில் மற்றும் பேருந்துகளை போல் விமானங்களில் பயண சீட்டு பெறாமல் பயணம் செய்ய முடியாது. விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பல கட்டங்களாக தீவிர சோதனைகள் இருக்கும்.
டிக்கெட் இல்லாமல் விமான பயணம்
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நபர், கடந்த 6 ஆண்டுகளாக 120 முறை இலவசமாக விமான பயணம் செய்த மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த 35 வயதான Tiron Alexander என்பவர், கடந்த 2018 முதல் 2024 வரை விமான பணியாளர் என தன்னை கூறி கொண்டு 120 முறை இலவசமாக விமான பயணம் செய்துள்ளார்.
விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் முன்பதிவு செய்யும் முறை மூலம், Southwest Airlines, American Airlines and Delta Air Line உள்ளிட்ட பல்வேறு விமானங்களில் இலவசமாக பயணம் செய்துள்ளார்.
இதற்காக 30க்கும் மேற்பட்ட பேட்ச் எண்களை பயன்படுத்திய அவர், தன்னை விமான பணியாளர் என கூறிக்கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்ல போலியான அடையாள அட்டைகளையும் பயன்படுத்தினார்.
இது டிக்கெட் வாங்காமலேயே போர்டிங் கேட் மற்றும் விமானத்திற்குள் நுழைய அவருக்கு அனுமதித்தது.
தொடர்ச்சியான மோசடி மற்றும் தவறான அடையாளம் மூலம், விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதிக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |