வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன நபர்! அன்பின் தேவையை உணர்த்தும் சம்பவம்

By Ragavan May 27, 2023 05:14 PM GMT
Report

அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையானை ஒருவர் கட்டிபிடித்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கலிபோர்னியாவில் நடக்கவிருந்த ஒரு வங்கிக் கொள்ளை, ஒரு சாமானிய மனிதனின் அன்பால் நிறுத்தப்பட்டது என்பது ஆச்சரியத்திற்குரிய நிகழ்வாகும்.

அண்டை வீட்டார்

மைக்கேல் ஆர்மஸ் சீனியர் (Michael Armus Sr.) எனும் நபர் திங்களன்று Bank of the West-வங்கியில் ஒரு காசோலையை டெபாசிட் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ​​ஒரு நபர் வங்கி உள்ளே நுழைந்தார். சட்டையால் தன் முகத்தை மறைத்திருந்த அந்த நபர், தன்னிடம் வெடிபொருட்கள் இருப்பதாகவும், வங்கியில் இருக்கும் பந்தத்தை தன்னிடம் கொடுக்கவேணும் என்றும் கோரிக்கை வைத்தார்.

வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன நபர்! அன்பின் தேவையை உணர்த்தும் சம்பவம் | Us Man Stops Bank Robbery By Hugging SuspectImage Credit: ABC/ Woodland Police Department

அதிர்ஷ்டவசமாக, ஆர்மஸ் கொள்ளையனை முன்னாள் அண்டை வீட்டார் என அறிந்துகொண்டு, அவருடன் உரையாடலைத் தொடங்குவதன் மூலம் கொள்ளை நடவடிக்கையில் தலையிட முடிவு செய்தார்.

அரவணைத்து ஆறுதல் கூறினார்

தனது பாதுகாப்பு குறித்து பயப்படாமல், அந்த நபரை அணுகி, 'என்ன ஆச்சு?... உனக்கு வேலை இல்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த கொள்ளைக்காரன், 'இந்த ஊரில் எனக்காக எதுவும் இல்லை. எனக்காக இந்த ஊரில் எதுவும் இல்லை. நான் சிறைக்கு செல்ல விரும்புகிறேன்’’ என்றார்.

ஆர்மஸ், அந்த நபரை வெளியில் செல்லும்படி சமாதானப்படுத்தி, அவரை அரவணைத்து ஆறுதல் கூறினார். அவர் கட்டிபிடித்ததும் அவன் அழத் தொடங்கினான். பின்னர் அங்கு பொலிசார் வந்தபிறகு அவனிடமிருந்து விலகிச் சென்றார்.

வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன நபர்! அன்பின் தேவையை உணர்த்தும் சம்பவம் | Us Man Stops Bank Robbery By Hugging SuspectDK7C0H

இதனால் வங்கியில் கொள்ளையும் தடுக்கப்பட்டது, வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

எடுவார்டோ பிளாசென்சியா (42 வயது) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், உட்லேண்ட் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கூறியது போல் அவரிடம் எந்த ஆயுதமும் வெடிபொருளும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

யாரிடமாவது அன்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்

இந்த சம்பவம் குறித்து பேசிய ஆர்மஸ், ''20, 25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் வாழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்தார். எனக்கு அவரைத் தெரியாது, ஆனால் நான் அவரைப் பலமுறை சுற்றுப்புறத்தில் பார்த்திருக்கிறேன். அவன் என் மகளின் நண்பன். அது தான் என் மனதை உடைத்தது. அங்கு நடந்த விதாயத்தில், நான் வேறு ஒன்றைப் பார்த்தேன். அவர் பேசும் விதத்தில் அவர் மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றியது." என்று கூறினார்.

பிளாசென்சியா கைது செய்யப்பட்ட பிறகு, அர்மஸ் அவரை சிறையில் சந்திப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறினார்.

வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன நபர்! அன்பின் தேவையை உணர்த்தும் சம்பவம் | Us Man Stops Bank Robbery By Hugging SuspectKCRA

"அன்பு எல்லாவற்றையும் வெல்லும். மக்கள் அதை உணரவில்லை. யாரிடமாவது அன்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்" என்று ஆர்மஸ் கூறினார்.

இந்த சம்பவத்தில் பொலிஸார் அவரைப் பாராட்டினர் மற்றும் "ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய சரியான செய்தியை வழங்கிய நல்ல சாமானியன்" என்று அழைத்தனர். 

 

மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US