இனியாவது என் வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுகிறேன்: தவறுதலாக 38 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த அப்பாவி!
செய்யாத குற்றத்திற்காக தவறுதலாக 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த நபர்.
பல ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த விடுதலை; வாழ்க்கையை அனுபவிக்க விருப்பம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில், செய்யாத குற்றத்திற்காக தவறுதலாக 38 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
நீதித்துறை அமைப்பால் அநீதி இழைக்கப்பட்ட Maurice Hastings எனும் 69 வயது அப்பாவி நபருக்கு இறுதியாக உரிய உரிமை வழங்கப்பட்டுள்ளது.
1983-ல் கொலை மற்றும் இரண்டு கொலை முயற்சி குற்றங்களுக்காக தவறுதலாக கைது செய்யப்பட்டு, இப்போது 38 ஆண்டுகள் கழித்து, ஹேஸ்டிங்ஸ் கலிபோர்னியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உண்மையில் அவர் எந்த தீங்கும் செய்யவில்லை, இந்த கொலை குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக சோதிக்கப்படாத டிஎன்ஏ சான்றுகள் இப்போது மீண்டும் சோதிக்கப்பட்டபோது, அது வேறு ஒரு நபரை சுட்டிக்காட்டிய பின்னர், Maurice அப்பாவி என உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
பல வருட முடிவில்லாத காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த விடுதலையைப் பற்றி பேசிய ஹேஸ்டிங்ஸ், "இந்த நாள் வர வேண்டும் என்று நான் பல வருடங்களாக வேண்டிக் கொண்டிருந்தேன்., அதற்காக நான் இங்கே ஒரு கசப்பான மனிதனாக நிற்கவில்லை, ஆனால் நான் இப்போது என் வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுகிறேன்" என்று செய்தியாளர் கூட்டத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.