அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: தேடுதல் வேட்டையில் பொலிஸார்
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் இறங்கியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது அரங்கேறியுள்ளது.
அந்த வேளையில் பல்கலைக்கழக வளாகத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உடனடியாக பால்டிமோர் காவல்துறைக்கு தெரியப்படுத்தினர்.
தேடுதல் வேட்டையில் பொலிஸார்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உடனடியாக பாதிக்கப்பட்டவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்தவொரு உயிர் சேதங்களும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை.
Tribune News Service via Getty Images
இதற்கிடையில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத நபரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |