ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம்
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவத் தலைவர்கள் தங்கள் துருப்புக்களுக்கு சாத்தியமான பதிலடித் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்குமாறு கூறி வருகின்றனர்.
19 இராணுவ தளங்கள்
இன்றிரவு நடைபெறும் தாக்குதல் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் வசதிகள் மீது முன்னெடுக்கப்படலாம் என்று இராணுவத் தலைவர்கள் துருப்புக்களிடம் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளும் இந்த பதிலடித் தாக்குதலில் களமிறங்களாம் என்றும் அமெரிக்க இராணுவ தளபதிகள் எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கு முழுவதும் பல நாடுகளில் சுமார் 40,000 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு மட்டும் மத்திய கிழக்கில் 19 இராணுவ தளங்கள் உள்ளன. இதில் 8 தளங்கள் நிரந்தரமானவை. இதில் கத்தார், சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் முக்கியமான தளங்கள் அமைந்துள்ளன.
9 மில்லியன் மக்கள்
ஈரான் இந்த தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் என்றால் GCC எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இந்தப் போரில் வலுக்கட்டாயமாக களமிறங்கக் கூடும்.
இதனால் அதிக நெருக்கடிக்கு உள்ளாகப் போவது இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள 9 மில்லியன் மக்கள் என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த குண்டுவீச்சு உண்மையில் மத்திய கிழக்கு நாடுகளை மொத்தமாக பாதிக்கும் என்பதுடன், இதன் தாக்கம் உலக பொருளாதாரத்தையும் புரட்டிப்போடும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |