30 இராணுவ விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய அமெரிக்கா., பேரழிவை சந்திக்கவுள்ள ஈரான்
இஸ்ரேல்-ஐரான் மோதல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்கா தனது 30-க்கும் மேற்பட்ட ராணுவ டாங்கர் விமானங்களை வெறும் மூன்று நாட்களில் ஐரோப்பாவிற்கு மாற்றியுள்ளது.
BBC Verify வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் KC-135 Stratotanker வகை விமானங்கள்.
இவை நடுவானில் பிற போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த விமானங்கள் ஸ்பெயின், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க விமானத் தளங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சில விமானங்கள் சிசிலி மற்றும் கிரீட் தீவுகள் அருகே பறந்ததாகவும், ஒரு விமானம் கிரீட்டில் தரையிறங்கியதாகவும் தகவல்கள் உள்ளன.
“இது மிகவும் அபூர்வமான நகர்வாகும்,” எனவும், அமெரிக்கா பாரிய அளவிலான போர் நடவடிக்கைக்குத் தயாராக இருக்கலாம் எனவும், ராணுவ விசேட நிபுணர் ஜஸ்டின் பிராங்க் BBC-க்கு கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் G7 உச்சி மாநாட்டிலிருந்து திடீரென விலகிச் சென்ற பின்னர், “நாம் ஏதாவது செய்யப்போகிறோம்” என கூறிய பின்னர் இவ்வாறு நடப்பது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், அமெரிக்காவின் USS Nimitz என்ற விமானம் ஏற்றிய போர் கப்பல் தற்போது மத்திய கிழக்கு நோக்கி நகர்வது, F-16, F-22 மற்றும் F-35 போர் விமானங்கள் அந்தப்பகுதிக்கு அனுப்பப்படுவது, மற்றும் Diego Garcia தளத்தில் B-2 போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பது — இவை அனைத்தும் ஈரான் மீது தாக்குதல் சாத்தியத்தைக் காட்டும் என பாதுகாப்பு வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US KC-135 Tanker Deployment, Iran Israel Conflict US role, B-2 Bombers Diego Garcia Iran, Trump US military Iran strike, USS Nimitz Middle East movement, US Air Force jets Europe 2025, Mid-air refueling Iran war, Strategic ambiguity US Iran