அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்... ஈரானின் எண்ணெய் வளத்தை குறிவைக்கும் ட்ரம்ப்
ஈரானின் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவதன் மூலம், அந்நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் எண்ணெய் வளம்
அமெரிக்காவின் இந்த நகர்வை எதிர்ப்பவர்கள், அடிப்படையிலேயே முட்டாள்கள் என்றும் ட்ரம்ப் சாடியுள்ளார். ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

ஜனவரியில் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் காலவரையின்றி கட்டுப்படுத்த உத்தேசித்துள்ளதும், ஈரான் தொடர்பான தனது திட்டங்கள் வெனிசுலாவுக்கான திட்டங்களிலிருந்து வேறுபட்டவை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உண்மையில் ஈரானின் எண்ணெய் வளம் மொத்தம் சொந்தமாக்குவதே தமது திட்டம் என்றும், இதை எதிர்ப்பவர்கள் உண்மையில் முட்டாள்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கார்க் தீவை நாங்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளது, அல்லது விட்டுவைக்கலாம். தங்களிடம் பல திட்டங்கள் இருப்பதாகவும், ஈரானில் கார்க் தீவில் அமெரிக்கா சில காலம் தங்கியிருக்கும் நிலை வரும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க கடற்படை வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்
மேலும், இராணுவத்தின் 82வது வான்வழிப் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் திரிபோலி கப்பலில் சுமார் 3,500 கூடுதல் வீரர்கள் மத்திய கிழக்குக்கு வந்தடைந்தனர் என அமெரிக்காவின் CENTCOM தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில் கடந்த ஒரு மாதமாக நிர்வாகத்திற்குள் நடந்த கலந்துரையாடல்களில், கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றிப் பேசப்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படியான எந்தவொரு முயற்சியும், அந்த நடவடிக்கைக்கு உதவும் ஒரு பிராந்திய நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி, ஈரானுக்குள் நுழையும் அமெரிக்கப் படைகள் தங்கள் இராணுவத்தின் உண்மையான முகத்தை அறிந்துக் கொள்வார்கள் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |