H-1B திட்டத்தில் வழங்கப்பட்ட 60 நாள் அவகாசம் ரத்து: அமெரிக்கா பரிசீலனை: இந்தியர்கள் பாதிப்பு
H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.
H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
வேலையில் இருந்து நீக்கப்பட்ட H-1B வெளிநாட்டு தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் அடுத்த வேலையை தேடிக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கால அவகாசத்தை ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள இந்த முன்மொழிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எப்போது சட்டமாக்கப்படும் அல்லது இதன் முழுமையான விவரங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.

இந்த நடைமுறை உறுதி செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட காலம் முடிவதற்கும் வேலை இழந்தவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இந்திய வம்சாவளியினருக்கு மிகப்பெரிய பாதிப்பு
அமெரிக்காவின் H-1B திறமை வாய்ந்த தொழிலாளர் திட்டத்தில் இந்த மாற்றம் இறுதி செய்யப்பட்டால் அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும்.

அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகளின்(USCIS) சமீபத்திய தரவுகள் படி, கிட்டத்தட்ட 71% அங்கீகரிக்கப்பட்ட H-1B திட்டங்கள் இந்தியர்களுக்கே கடந்த 2024ம் நிதியண்டில் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி, அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 52 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |