பதிலடி கொடுக்க தயாராகும் பைடன்! ரஷ்யா-அமெரிக்க இடையே அதிகரிக்கும் பதற்றம்: கசிந்த முக்கிய தகவல்
ரஷ்யா மீது பெரிய அளவிலான பொருளாதார தடைகளை அமெரிக்க விதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2020 ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது உட்பட அமெரிக்காவை குறிவைத்து நடத்திய சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.
அமெரிக்காவிலிருந்து குறைந்தது 10 நபர்களை வெளியேற்றுவது உட்பட 30 ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதிக்கவுள்ளதாகவும், வியாழக்கிழமை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தூதரக அதிகாரிகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேசயம் ஜூன் மாதத்திலிருந்து அமெரிக்க நிதி நிறுவனங்கள் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்புள்ள பத்திரங்களை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தடை உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான தொலைபேசி உரையாடலின் போது, அதன் தேசிய நலன்களை பாதுகாக்க அமெரிக்க உறுதியுடன் செயல்படும் என பைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.