பெரிதாகும் பிரச்சினை: ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி
உக்ரைன் ரஷ்யப் போர் பிரச்சினை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் எங்கள் நாட்டைத் தாக்கினால், உலகப்போர் வெடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகள் அவரை அசட்டை செய்வது தெளிவாகத் தெரிகிறது.
ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி
உக்ரைன், தனது கூட்டாளர்களான மேற்கத்திய நாடுகளிடம் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களைக் கொடுத்தால், புடினுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என அஞ்சி, ஜேர்மனி முதலான நாடுகள் தயக்கம் காட்டி வந்தன.
Credit: Reuters
அமெரிக்காவோ, ரஷ்யாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உக்ரைனை முன்பு எச்சரித்திருந்தது.
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைனைத் தாக்கிவரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ள ஆயுதங்களைக் கொண்டு, உக்ரைன் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் தற்போது அனுபதியளித்துள்ளதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Credit: Getty
பிரச்சினை பெரிதாகலாம்
மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் எங்கள் நாட்டைத் தாக்கினால், உலகப்போர் வெடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் சமீபத்தில் கூட எச்சரித்திருந்தார்.
Credit: Getty
அவரது எச்சரிப்பையும் மீறி, பிரான்சும், ஜேர்மனியும் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளன. தற்போது, அமெரிக்காவும் அதே முடிவுக்கு வந்துள்ளது.
Credit: Getty
ஆக, புடினை இந்த விடயம் ஆத்திரமூட்டக்கூடும். அதனால் பிரச்சினை பெரிதாகவும் வாய்ப்புள்ளது. ஆனால், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த இந்த நாடுகள் உக்ரைனுக்கு அனுமதியளித்தாலும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், தங்களை ரஷ்யா தாக்கினாலோ அல்லது தாக்கத் தயாரானாலோ மட்டுமே ரஷ்யாவைத் தாக்கலாம் என்றும் அந்நாடுகள் உக்ரைனுக்கு நிபந்தனையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |