காசாவுக்கு ரூ. 832 கோடி மனிதாபிமான உதவி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசாவுக்கு சுமார் 832 கோடியை அமெரிக்கா உதவியாக வழங்க உள்ளது.
இஸ்ரேலில் அமெரிக்க ஜனாதிபதி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசா மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்துள்ளார்.
டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு நேரில் வரவேற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வருத்தமானது, நான் பார்த்த தரவுகளின் அடிப்படையில் இந்த தாக்குதல் வேறு குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது என தெரிவித்தார்.
மேலும் காசாவிற்கான மனிதாபிமான சேவைகளுக்காக (சுமார் 100 மில்லியன் டொலர்) 832 கோடியை அமெரிக்கா வழங்கும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த போர் நாகரிகம் அடைந்தவர்களுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும் இடையே நடைபெறும் போர் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |