மத்திய கிழக்கு நாடுகளுக்கு $23 பில்லியன் டொலர் ஆயுதம்: அமெரிக்காவின் அதிரடித் திட்டம்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல பில்லியன் மதிப்பிலான ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
$23 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை
சுமார் $23 பில்லியன் டொலர் மதிப்பிலான நவீன ஆயுத மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கின் நட்பு நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முறையாக அறிவித்து இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பயன் பெறும் நாடுகள்
இந்த திட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட $8 பில்லியன் மதிப்பிலான வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை பெறுகின்றன.
குவைத் நாட்டிற்கு ரேடார் உள்கட்டமைப்புகள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் உட்பட சுமார் $8 பில்லியன் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்க உள்ளது.
ஜோர்டான் நாட்டின் விமானப் படையின் தளவாடங்களுக்கான உதவிக்காக சுமார் $70.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை போக, மேலும் 3 நாடுகளுக்கு $6 பில்லியன் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |