உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் அந்த முடிவு: மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு
ரஷ்யாவும் உக்ரைனும் ஆபத்தான கொத்து குண்டுகள் பயன்பாட்டினை கைவிட வேண்டும் எனவும், உக்ரைனுக்கு கொத்து குண்டு விநியோகத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அமெரிக்காவை மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொத்து குண்டுகளும்
உக்ரைனுக்கு புதிதாக ஆயுத தொகுப்பு ஒன்றை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், அந்த தொகுப்பில் விவாதத்துக்குரிய கொத்து குண்டுகளும் இடம்பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
@getty
உக்ரைன் மீதான போரின் போது ரஷ்யாவும் உக்ரைனும் கொத்து குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்புடைய கொத்து குண்டுகளால் பொதுமக்கள் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
இரண்டாம் உலகப் போரில் முதன்முதலில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 2008 ல் கிளஸ்டர் குண்டுகளுக்கு எதிரான மாநாட்டின் கீழ் 120 க்கும் மேற்பட்ட நாடுகள் கொத்து குண்டு பயன்பாட்டை தடை செய்தன.
அமெரிக்க அதிகாரிகள் தரப்பு
ஆனால் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா நாடுகள் குறித்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தன. தற்போது உக்ரைன் பதில் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், கொத்து குண்டுகளை அளிக்குமாறு அமெரிக்காவை உக்ரைன் கட்டாயப்படுத்தி வருகிறது.
@AFP
அத்துடன் ரஷ்ய படைகளுக்கு எதிராக கொத்து குண்டுகள் தான் பலனைத் தரும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை வெள்ளைமாளிகை தெரிவிக்கையில், உக்ரைனுக்கு கொத்து குண்டுகள் அணிப்பது தொடர்பில் தீவிர ஆலோசனை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை உக்ரைனுக்கான ஆயுதங்கள் தொடர்பில் அறிக்கை வெளியாகும் போது, கொத்து குண்டுகளும் அதில் உட்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |