ஈரானுக்கு எதிரான போர்: ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர் என பெயர் மாற்றம்: டிரம்பின் ராஜதந்திரம்?
ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு புதிய பெயரை சூட்ட அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர்
ஈரானுக்கு எதிரான பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தோல்வியடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான தாக்குதலை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்கா மீண்டும் போர் தாக்குதலை தொடங்கினால் அதற்கு ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர்(Operation Sledgehammer) என்று பெயர் சூட்ட அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 28ம் திகதி இஸ்ரேலிய படைகளுடன் இணைந்து அமெரிக்க முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் எபிக் பியூரி(Operation Epic Fury) என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
பெயர் மாற்றத்திற்கான காரணம்?
போர் நடவடிக்கைக்கு பெயர் மாற்றம் என்பது அடையாளம் மாற்றம் மட்டுமல்ல, இதற்கு பின்னணியில் 1973ம் ஆண்டு போர் அதிகாரத் தீர்மானம் தொடர்பான இராஜதந்திர நகர்வும் மறைந்துள்ளது.
1973ம் ஆண்டின் சட்டப்படி, அமெரிக்க ஜனாதிபதி ஒரு நாட்டின் மீது போர் நடவடிக்கையை தொடங்கினால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 60 நாட்களுக்குள் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் போருக்கு புதிய பெயர் சூட்டுவதன் மூலம் அமெரிக்க அரசு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய 60 நாள் காலக்கெடு மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.
ஏப்ரல் மாதம் ஆபரேஷன் எபிக் பியூரி முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்து இருந்தது, இந்நிலையில் அதற்கு புதிய பெயர் சூட்டுவதன் மூலம் புதிய 60 நாள் கெடு தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வாதிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |