100க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகளுடன் தயாரான ஈரான்? அமெரிக்க உளவுத்துறை தகவல்
ஈரான் 100க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தயார் செய்துள்ளதாக, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகள்
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் துணை தூதரக அதிகாரிகள் பலியானதில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் 100க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தயார் செய்துள்ளது என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளிப்படுகிறார்கள்.
இஸ்ரேல் மீதான ஈரானின் உடனடி தாக்குதலின் ஒரு பகுதியாக 100க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகளை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே வேளையில் பென்டகன் செங்கடலுக்குள் விமானம் தாங்கி கப்பலை நகர்த்துகிறது. ஒரு தாக்குதல் முழு அளவிலான போரைத் தூண்டும் என்ற அச்சத்தில் அமெரிக்கா இதனை செய்வதாக கருத்து நிலவுகிறது.
USS Dwight Eisenhower
இதுகுறித்து விளக்கமளித்த அதிகாரிகள் சிலர், ஈரான் தனது நடவடிக்கை மூலம் தாக்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா அவதானித்துள்ளதாக கூறியுள்ளனர்.
வெள்ளியன்று, இப்பகுதியில் அமெரிக்கா தனது இருப்பை உறுதிப்படுத்தும் என்றும், தெஹ்ரானுக்கு எச்சரிக்கையாக USS Dwight Eisenhower செங்கடலுக்குள் அனுப்பப்படும் என்றும் பென்டகன் கூறியது.
ஈரானால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்த USS Dwight Eisenhower இடைமறிக்க முடியும். முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் காட்ஸ், ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கும் என தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |