வெனிசுலாவுடன் தொடர்புடைய 2-வது எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
வெனிசுலாவுடன் தொடர்புடைய இரண்டாவது எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது.
அமெரிக்க இராணுவம், வெனிசுலாவுடன் தொடர்புடைய Veronica III என்ற எண்ணெய் கப்பலை இந்தியப் பெருங்கடலில் கைப்பற்றியுள்ளது.
இந்த கப்பல், ஜனவரி மாதத்தில் வெனிசுலா கடற்கரையிலிருந்து தப்பிச் சென்றதாக Pentagon தெரிவித்துள்ளது.
வெனிசுலா பல ஆண்டுகளாக அமெரிக்காவின் எண்ணெய் தடைகளுக்கு உள்ளாகி வருகிறது. இதனால், “shadow fleet” எனப்படும் போலியான கொடிகள் கொண்ட கப்பல்களை பயன்படுத்தி, உலக சந்தைகளில் எண்ணெயை கடத்தி வந்தது.

2025 டிசம்பரில், ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கு “quarantine” உத்தரவு பிறப்பித்தார். அதன்பின், ஜனவரி மாதத்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.
Veronica III கப்பல், மதுரோ கைது செய்யப்பட்ட அதே நாளில் வெனிசுலாவை விட்டு புறப்பட்டு, சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றிச் சென்றது.
இந்நிலையில், “இந்த கப்பல் ட்ரம்ப் உத்தரவை மீறி தப்பிக்க முயன்றது. கரீபியக் கடலிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை அதை கண்காணித்து, இறுதியில் கைப்பற்றினோம்” என்று Pentagon தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் பனாமா கொடியுடன் இயங்கினாலும், அமெரிக்க நிதி அமைச்சகத்தின் தடைகளில் ஈரான் மற்றும் வெனிசுலாவுடன் தொடர்புடையதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா மற்றொரு கப்பல் Aquila II-யையும் இந்தியப் பெருங்கடலில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |