களமிறங்கும் அமெரிக்காவின் ஓஹியோ நீர்மூழ்கிக் கப்பல்: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவு
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போராடவும், தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ளவும் இஸ்ரேலுக்கு முழு உரிமை இருப்பதாக அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
அத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அவரச கதியில் அமெரிக்கா அனுப்பி வைத்தது.
மேலும் இஸ்ரேலுக்கான ஆதரவை உலக நாடுகளுக்கு வலுவாக வெளிப்படும் வகையில், போர் தீவிரமாக நடைபெற்று வரும் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விஜயம் செய்தார்.
இதற்கு மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய ராணுவ தாக்குதலையும் தீவிரமாக சாடினர்.
இதற்கிடையில் பிரித்தானியாவும் தங்களது போர் கப்பலை இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
அடுத்ததாக நீர்மூழ்கி கப்பல்
இந்நிலையில், அமெரிக்கா தங்களது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
US sends nuclear submarine to the Middle East
— NEXTA (@nexta_tv) November 6, 2023
The US military's Central Command (CENTCOM) has announced the dispatch of an Ohio-class nuclear-powered submarine to the Middle East.
"On November 5, 2023, an Ohio-class submarine arrived in the U.S. Central Command area of… pic.twitter.com/kBPEz4Pg7N
இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை தெரிவித்துள்ள தகவலில், மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்காவின் ஓஹியோ வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அனுப்பி இருப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை ஒரு அறிக்கையில், ஓஹியோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் நவம்பர் 5ம் திகதி மத்திய கிழக்கு தரைக்கடல் பகுதிக்கு சென்று சேர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |