சீன போர் கப்பல்களுக்கு புதிய அச்சுறுத்தல் - அமெரிக்காவின் QUICKSINK ஏவுகணை சோதனை வெற்றி
சீனாவின் போர்க்கப்பல்களை குறிவைக்கும் வகையில், அமெரிக்கா தனது QUICKSINK எனப்படும் 500 பவுண்ட் ஏவுகணையை B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இந்த ஆயுதம், பாரிய தளவாடக் கப்பல்களை, குறிப்பாக ஏர்கிராஃப்ட் கேரியர்கள் போன்றவற்றை குறைந்த செலவில் அழிக்கக்கூடியது.
இது தென் சீனக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரமான கடல்சார் உலாவல்களுக்கு அமெரிக்காவின் உளவுத்துறை அளிக்கும் புதிய ஆதரவாக பார்க்கப்படுகிறது.
"QUICKSINK, அமெரிக்காவின் சக்தியை விரைவாக நிறுவும் திறனை வலுப்படுத்தும் நவீன கருத்துக்களை வலியுறுத்துகிறது" என AFRL (Air Force Research Laboratory) தெரிவித்துள்ளது
இந்த புதிய 500 பவுண்ட் மாடல், ஏற்கனவே RIMPAC 2024 நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட 2000 பவுண்ட் QUICKSINK வெடிகுண்டின் சிறிய வடிவமாகும். இது B-2 Bomber விமானத்தை மிகப்பாரிய கடற்படை இலக்குகளை தாக்கக்கூடியதாக மாற்றுகிறது.
சீனாவின் கடற்படை விரிவாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த ஆயுதம் அமெரிக்கா–சீனா இடையே உருவாகும் கடல்சார் போரளவில் புதிய பாகுபாட்டை உருவாக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US QUICKSINK missile 2025, Anti-ship weapon test B-2 bomber, South China Sea military tensions, US vs China naval expansion, 500-pound anti-ship bomb, QUICKSINK B-2 Spirit test, US Navy freedom of navigation, Affordable anti-ship solution, US China missile threat, RIMPAC 2024 QUICKSINK test