போர்க்களமாகும் பல்கலைக்கழக வளாகங்கள்... பெருகும் ஆதரவு: அதிகரிக்கும் கைது எண்ணிக்கை
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடரும் என்றே மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டங்கள் பரவியுள்ளது
மாணவர்கள் போராட்டங்களை ஒடுக்க பொலிசார் முயன்று வருவதுடன், கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் தொடர்பில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முதலீடு செய்வதை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு அமெரிக்க ராணுவத்தின் உதவியை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
அமெரிக்கா முழுவதும் தற்போது அதிக எண்ணிக்கையிலான கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் பரவியுள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டும் ஒரு வாரம் முன்னர் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கொலம்பியா வளாகம் சனிக்கிழமை அமைதியாக இருந்தது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என்றே பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலவரத்தை ஒடுக்கும் பொலிசார்
ஆனால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாக கூறப்படுகிறது. Southern California பல்கலையில் திரளான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன் பல்கலை வளாகத்தில் இருந்து மட்டும் 80 மாணவர்கள் கைதாகியுள்ளனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கைதானவர்களில் பசுமைக் கட்சியின் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டீன் என்பவரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.
மிக அமைதியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கலவரத்தை ஒடுக்கும் பொலிசார் வளாகத்தில் நுழைந்ததாக ஜில் ஸ்டீன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஞாயிறன்று Southern California பல்கலை வளாகத்தில் மாணவர்களும், வளாகத்தின் வெளியே பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |