சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி
உலகளவில் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவிடம் 100 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்ய காத்திருக்கும் இந்த எண்ணெயை, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாற்றி அனுப்ப வேண்டும் என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட அச்சத்தை குறைக்கவும், விழி உயர்வை கட்டுப்படுத்தவும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, அமெரிக்கா வழங்கிய தற்காலிக விலக்கு காரணமாக, இந்தியா இந்த மாதம் சுமார் 33 மில்லயன் பீப்பாய் ரஷ்ய எண்ணெயை பெற உள்ளது.

இதில் 10 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்கெனெவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 23 மில்லியன் பீப்பாய் வியாவில் வரவுள்ளது.
Kpler என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்தன்படி, இந்திய சுத்திகரிப்பு நிறுவங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிகரித்து வருகின்றன. ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா மாற்று வழிகளை தேடுகிறது.
அமெரிக்கா, இது ரஷ்யாவிற்கு ஆதரவான நடவடிக்கை அல்ல, உலக சந்தையை சமநிலைப்படுத்தும் தற்காலிக முயற்சி மட்டுமே என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |