அமெரிக்கா - வெனிசுலா இடையே போர் பதற்றம்: விமானங்களை ரத்து செய்த பிரபல நாடுகள்
அமெரிக்கா-வெனிசுலா இடையே போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகளை வெனிசுலாவுக்கான தங்களது விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
அமெரிக்கா - வெனிசுலா இடையே போர் நிறுத்தம்
அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை நீடித்து வரும் நிலையில், கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தங்களது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவித்து வருகிறது.
முக்கியமாக உலகின் சக்திவாய்ந்த யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் விமானம் தாங்கி போர் கப்பலை கரீபியன் கடல் பிராந்தியத்தில் நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெனிசுலாவும் ஆயுத்தமாகி வருகிறது.
ஜனாதிபதி நிகோலஸும் சிறப்பு அவசர நிலையை அறிவித்ததோடு, பிளான் இண்டிபென் டென்சியா 200 என்ற திட்டத்தின் கீழ் நாட்டின் நிலம், கடல், வான் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையையும் முடுக்கி விட்டுள்ளார்.
விமான சேவைகள் ரத்து
இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் விமானங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஸ்பெயின், சிலி, கொலம்பியா, பிரேசில், போர்ச்சுகல் மற்றும் டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.
மொத்தம் 6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.
துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெனிசுலாவுக்கான விமான சேவையை இன்று முதல் நவம்பர் 28ம் திகதி வரை நிறுத்தி வைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |