நாட்டில் நிலைமை மோசமடைந்ததற்கு அமெரிக்கா தான் காரணம்! ஆப்கான் ஜனாதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு
ஆப்கானில் நிலைமை மோசமடைந்ததற்கு அமெரிக்கா தான் காரணம் என அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி குற்றம்சாட்டியுள்ளார்.
மே 1ம் திகதி முதல் அமெரிக்காவும் நேட்டோவும் அதன் இராணுவப்படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றத் தொடங்கின.
வெளிநாட்டு படைகள் வெளியேற தொடங்கிய நாள் முதல் ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஆப்கான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திடீரென வெளியேறியது, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மோசமடைய வழிவகுத்தது என்று குற்றம் சாட்டினார்.
ஆப்கானின் தற்போதைய நிலைமைக்கு காரணம் திடீரென எடுக்கப்பட்ட முடிவு தான், படைகளை திரும்பப் பெறுதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவை எச்சரித்ததாக அஷ்ரப் கானி கூறியுள்ளார்.