டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்! பேஸ்புக்கில் பதிவால் உருவான பிரச்சனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிரம்பிற்கு கொலை மிரட்டல்
50 வயது நதாலி ரோஸ் ஜோன்ஸ் என்ற பெண், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆகஸ்ட் 18ம் திகதி பெடரல் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 6ம் திகதியன்று ரோஸ் ஜோன்ஸ் தன்னுடைய பேஸ்புக் சமூக ஊடக பக்கத்தில், “இன்று ஐந்து மாகாண FBI அதிகாரிகளிடம் டிரம்ப்பை POTUS என குறிப்பிட்டு கொலை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்து இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ஆகஸ்ட் 14ம் திகதி அன்று மற்றொரு பதிவில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திடம் அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்யுமாறும், அவர் பயங்கரவாதி என்றும் ரோஸ் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவின் ரகசிய சேவை நடத்திய விசாரணையில் ரோஸ் ஜோன்ஸ் தான் தெரிவித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
கைது மற்றும் வழக்குப்பதிவு
நியூயார்க் நகருக்கு சமீபத்தில் சென்ற ரோஸ் ஜோன்ஸ் மீது அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பணம் கேட்டு மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு டிரம்ப் நிர்வாகமே காரணம், எனவே அதற்கு அவரை பழிவாங்க விரும்புவதாக ரோஸ் ஜோன்ஸ் குற்றப்பத்திரிக்கையில் கூறியதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு நடைமுறைகளில் விரைந்து செயல்பட்டதற்கு வெள்ளை மாளிகை நன்றி தெரிவிக்கிறது என அதன் செய்தி தொடர்பாளர் டேவிஸ் இங்லே தெரிவித்துள்ளார்.
Threatening the life of the President is one of the most serious crimes and one that will be met with swift and unwavering prosecution. Make no mistake—justice will be served.
— Jeanine Pirro (@JudgeJeanine) August 18, 2025
We extend our deepest gratitude to our dedicated law enforcement partners, especially the Secret… pic.twitter.com/P9qT0rHg2g
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |