இளம் பெண் திடீர் மரணம்... கொந்தளித்த பொதுமக்கள்: தடுப்பூசி தொடர்பில் அதிரடி முடிவெடுத்த நாடு
இத்தாலியில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட சில நாட்களில் இளம் பெண் இறந்த நிலையில், 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.
இத்தாலியின் Genoa பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 18 வயதேயான Camilla Canepa என்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.
மே 25ம் திகதி தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நிலையிலேயே Camilla Canepa மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்குவதை இத்தாலிய ஆரசு தடை செய்துள்ளது.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்குவதில் கட்டுப்பாடுகளை கொண்டுவருவோம் எனவும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆஸ்ட்ராசெனகா முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியில் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் இளம் பெண் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
இதனையடுத்து, இளம் பெண் மரணம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என இத்தாலிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இத்தாலியில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 46% மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.
23% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.