கொரோனா பிடியிலிருந்து நம்மை தடுப்பூசியால் மீட்க முடியாது! WHO எச்சரிக்கை
கொரோனா தொற்றுநோயிலிருந்து உலகை மீட்க்க தடுப்பூசி மட்டும் போதுமானதாக இருக்காது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
2019 இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
சில மாதங்களாக சற்று குறைந்து வந்த கொரோனா தொற்று, குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளில் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
இதனிடையே, சமீபத்தில்100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசியை முடிவுக்கு கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், டைம்ஸ் ரேடியோவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Margaret Harris, கொரோனாவிலிருந்து மீள நாம் உண்மையில் மற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது தான் பிரச்சினை, தடுப்பூசி நம்மை இதிலிருந்து மீட்டெடுக்க போவதில்லை.
நாம் உண்மையில் மற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கூட்டமாக கூடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து முகக் கவசங்களை அணிய வேண்டும், குறிப்பாக உட்புறங்களில் இருக்கும் போது என Margaret Harris தெரிவித்துள்ளார்.