கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்: துருக்கி நிலநடுக்கம் குறித்து வைரமுத்து வெளியிட்ட பதிவு
துருக்கி நிலநடுக்கத்தினால் மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன என கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தின் பேரழிவு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களினால் பேரழிவை சந்தித்துள்ளன. இதுவரை இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 9000-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைகுலைந்துள்ள இருநாடுகளுக்கும் உதவிட உலக நாடுகள் விரைந்துள்ளன. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றன.
வைரமுத்து உருக்கமான கவிதை
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த கவிதையில், 'துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன வான்தொட்ட கட்டடங்கள் தரை தட்டிவிட்டன மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன் உலக நாடுகள் ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்' என கூறியுள்ளார்.
துருக்கியின் கீழே
— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2023
பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்#TurkeyEarthquake pic.twitter.com/yJGWZWJjqj
@Reuters