பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்..குழந்தைகள் உட்பட 6 உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து
பாகிஸ்தானில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மலைப்பகுதியில் கவிழ்ந்த வேன்
வடமேற்கு பாகிஸ்தானில் பீஷாம் பகுதியில் இருந்து கொலாய் பலாஸ் பகுதியை நோக்கி வேன் ஒன்று பயணித்தது. மலைப்பாங்கான பகுதியில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட குறைந்தது ஆறு பேர் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக படானில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Shutterstock
அதிவேகமாக பயணித்த வேன்
இதுகுறித்து விசாரணையை பொலிஸார் தொடங்கிய நிலையில், அதிக வேகம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. தற்போது நிகழ்ந்துள்ள விபத்து குறித்து KPK ஆளுநர் ஹாஜி குலாம் அலி தனது வருத்தத்தை தெரிவித்தார்.
அத்துடன் விபத்து குறித்து விரிவான அறிக்கையை வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |