இந்தியாவிலிருந்து கனடா வந்த 376 பேரை திருப்பி அனுப்பியதற்காக மன்னிப்புக் கோரும் கனேடிய நகரம்: வலிமிகுந்த வரலாறு

Canada
By Balamanuvelan May 20, 2021 09:41 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

1914ஆம் ஆண்டு, மே மாதம் 23ஆம் திகதி, அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிலிருந்து, கப்பல் ஒன்று கனடாவை வந்தடைந்தது. Komagata Maru என்று பெயரிடப்பட்ட அந்த கப்பலில் பிரித்தானிய குடியுரிமை கொண்ட 376 இந்தியர்கள் இருந்தார்கள்.

கனடாவுக்கு குடிபெயரும் ஆசையில் இருந்தவர்களை சுமந்துகொண்டு கனடாவின் வான்கூவரை வந்தடைந்த அந்த கப்பல், கனேடிய பெடரல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்தவர்களில் 24 பேர் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்பட, மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

எப்படியாவது அனுமதி கிடைத்துவிடும், வாழ்வு சிறக்கும் என்று ஆவலுடன் உணவும் தண்ணீரும் கூட இல்லாமல் அவர்கள் அந்த கப்பலில் காத்திருந்த நிலையில், ஜூன் மாதம் 19ஆம் திகதி, வான்கூவர் நகர கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்தியாவிலிருந்து கனடா வந்த 376 பேரை திருப்பி அனுப்பியதற்காக மன்னிப்புக் கோரும் கனேடிய நகரம்: வலிமிகுந்த வரலாறு | Vancouver Mayor Says Sorry For City

அதில், இந்துக்கள் முதலான மற்ற ஆசிய இனத்தவர்களை கனடாவுக்குள் அனுமதித்தால், நமது கலாச்சாரத்துக்கு அவர்களால் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கேடு விளையும் என்று கூறப்பட்டிருந்தது.

இன்னும் ஒரு மாதம் கப்பலிலேயே காத்திருந்த நிலையில், அந்த இந்தியர்கள் அனைவரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி கட்டாயப்படுத்தப்பட்டு கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். இந்தியா சென்றடைந்த அவர்களை பொலிசார் கைது செய்ய முயன்றபோது, ஏற்கனவே பரிதாப நிலையில் இருந்த அந்த இந்தியர்களில் 19 முதல் 20 பேர் வரை பொலிசாருடனான மோதலில் கொல்லப்பட்டார்கள், மற்றவர்கள் அரசியல் கிளர்ச்சியாளர்கள் என்று கூறி சிறையிலடைக்கப்பட்டார்கள்.

இந்தியாவிலிருந்து கனடா வந்த 376 பேரை திருப்பி அனுப்பியதற்காக மன்னிப்புக் கோரும் கனேடிய நகரம்: வலிமிகுந்த வரலாறு | Vancouver Mayor Says Sorry For City

இந்த பரிதாப சம்பவம் நடந்து 107 ஆண்டுகள் ஆன நிலையில், வான்கூவர் மேயரான Kennedy Stewart, அந்த சம்பவத்துக்காக தற்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்று வான்கூவர் காட்டிய அந்த பாகுபாடு, சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே கொடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார் அவர்.

மே 23ஆம் திகதியை வருடாந்திர Komagata Maru நினைவு நாளாக அறிவிப்பதாக தெரிவித்துள்ள Stewart, அந்த பயணிகள் பிரகாசமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையில் கனடாவுக்குள் நுழைய முற்பட்டார்கள். ஆனால், கனடாவின் இனவெறுப்பு சட்டங்கள் அவர்களை பயங்கர சூழலில் கடலிலேயே கைவிட்டுவிட்டன என்கிறார்.

இந்தியாவிலிருந்து கனடா வந்த 376 பேரை திருப்பி அனுப்பியதற்காக மன்னிப்புக் கோரும் கனேடிய நகரம்: வலிமிகுந்த வரலாறு | Vancouver Mayor Says Sorry For City

தற்போது வான்கூவரில் வாழ்ந்துவரும் Sukhi Ghuman (41), பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயிலும்போது Komagata Maru சம்பவம் குறித்து தான் அறிந்துகொண்டதாக கூறுகிறார். அது குறித்து அவர் தன் தந்தையிடம் விசாரிக்க, தனது தாத்தாவான Harnam Singhம், Komagata Maru சம்பவத்தில் சிக்கிய ஒருவர் என்று கூறியுள்ளார் Sukhiயின் தந்தை.

கடைசி வரை தன் தாத்தா அந்த காயங்களுடனேயே வாழ்ந்ததாக தெரிவித்த Sukhiயின் தந்தை, மீண்டும் ஒருமுறை கனடாவுக்கு வர வாய்ப்புக் கிடைத்தபோதும், ஏற்கனவே கனடா தனக்கு அளித்த அனுபவத்தை நினைவுகூர்ந்து, கனடாவுக்கு வர அவர் மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்... வலி மிகுந்த அந்த வரலாற்றை தாமே அனுபவித்தவர்களால், அனுபவித்த அந்த வலியை அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியுமா என்ன! 

இந்தியாவிலிருந்து கனடா வந்த 376 பேரை திருப்பி அனுப்பியதற்காக மன்னிப்புக் கோரும் கனேடிய நகரம்: வலிமிகுந்த வரலாறு | Vancouver Mayor Says Sorry For City  

31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US