டக் அவுட்டாக்கி இலங்கை வீரரை பழி தீர்த்த வருண் சக்ரவர்த்தி! வைரலாகும் புகைப்படம்
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், வருண் சக்ரவர்த்தி, பெங்களூரு வீரர் வஹிந்து ஹசரங்காவை டக் அவுட் ஆக்கியதன் மூலம் பழி தீர்த்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோலியின் பெங்களூரு மற்றும் இயான் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், நேற்று மோதின, இரு அணிகளுக்குமே இப்போட்டி மிகவும் முக்கியமானது என்பதால், போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொல்கத்தா அணி பெங்களூரு அணியை 10 ஓவரில் 92 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக்க, அதன் பின் ஆடிய கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில், 8 போட்டிகளில் 3 வெற்றி 5 தோல்விகளுடன் 5-வது இடத்திலும், பெங்களூரு அணி 8 போட்டிகளில் 5 வெற்றி மூன்று தோல்விகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இப்போட்டியில் கொலத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விளங்கினார். இவர் தன்னுடைய மாயஜால சுழற்பந்து வீச்சு மூலம் 4 ஓவர் வீசி, 13 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெடுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், வருண் சக்ரவர்த்தி ரசிகர்கள் நேற்றைய போட்டியின் புகைப்படம் ஒன்றை டிரண்டாக்கி வருகின்றனர்.
அதாவது நேற்றைய போட்டியில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வஹிந்து ஹசரங்காவை வந்தவுடனே வருண் சக்ரவர்த்தி அவரை துல்லியமான தன்னுடைய பந்து வீச்சின் மூலம் எல்.பி.டபில்யூ ஆக்கி வெளியேற்றினார்.
இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தியை வஹிந்து ஹசரங்கா, அருண் சக்ரவர்த்தியை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
இதனால் அதற்கு பின் இரு அணிகளுமே மோததாக காரணத்தினால், ஐபிஎல் தொடரில் அந்த பழியை வருண் சக்ரவர்த்தி தீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.