டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் ‘துருப்புச் சீட்டு’ வருண் சக்கரவர்த்தி கிடையாது! காரணத்துடன் விளக்கிய ராகனே
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் ‘துருப்புச் சீட்டு’ வருண் சக்கரவர்த்தி கிடையாது என இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ராகனே தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, இதுவரை இந்தியாவுக்காக 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
எனினும், கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீச வருகிறார். குறிப்பாக இவரை மாயாஜால ஸ்பின்னர் என பலர் அழைக்கின்றனர்.
இதனிடையே, உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மிக முக்கிய வீரர்கள் வருண் சக்கரவர்த்தியும் ஒருவர், அவர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் ‘துருப்புச் சீட்டு’ என பலர் கருதுகின்றனர்.
இந்நிலையில், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் சக்கரவர்த்தி இந்தியாவின் ‘துருப்புச் சீட்டு’ என்ற பரிந்துரைகளை ராகனே நிராகரித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி குறித்து கருத்து தெரிவித்த ராகனே, துருப்புச் சீட் என வருண் சக்கரவர்த்தி மீது முத்திரை குத்த நான் விரும்பவில்லை, ஏனெனில் அது அவருக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கலாம்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் வருண் சிறப்பாக பந்து வீசினார்.
அதே போல் தான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி அஸ்வின், ஐடேஜா, ராகுல் சாஹர் ஆகியோரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதனால்தான் ஒரு குறிப்பிட்ட ஸ்பின்னர் மீது துருப்புச் சீட் என முத்திரை குத்துவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
ஐபிஎல் தொடரில் வருண் சிறப்பாக விளையாடியுள்ளார், ஆனால் டி 20 உலகக் கோப்பையில் விளையாடும் அழுத்தம் வித்தியாசமாக இருக்கும்.
எனவே, நான் அவருக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை, இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும் மிகவும் சிறப்பானவர்கள் என ராகனே கூறியுள்ளார்.