இரவில் இதை செய்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவரும் வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என நினைப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு முறைகளை அடிப்படையாகக் கொண்டு முயற்சித்து பார்ப்பார்கள்.
வாஸ்து படி சில முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் வீட்டில் செல்வம் பெருகி தீமைகள் குறையும் என்பது ஐதீகம்.
அந்தவகையில் வீட்டில் செல்வம் பெருகுவதற்காக இரவு நேரத்தில் என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
செல்வம் அதிகரிக்க இரவில் என்ன செய்யலாம்?
- லட்சுமி தேவி இரவு நேரத்தில் வீட்டிற்கு வருவதால், வீட்டின் பிரதான கதவை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- குபேரனனின் உகந்த திசையான வடக்கு திசை காணப்படுவதால் அந்த திசையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- பூஜை அறையை எப்போதும் இருள் சூழ்ந்த வண்ணத்தில் வைக்கக் கூடாது.
- ஒரு வீட்டில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- இரவில் தூங்குவதற்கு முன் பூஜை அறையில் சிறிய விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
- இரவில் தூங்குவதற்கு முன்பாக துடைப்பத்தை நிமிர்த்தி வைக்காமல், கீழ் பக்கம் சாய்த்து வைப்பது நல்லது. இதையே லட்சுமி தேவி விரும்புவதாக நம்பப்படுகிறது.
- இரவில் தலையை தெற்கு நோக்கியும், கால்களை வடக்கு நோக்கியும் வைத்து தூங்குவது நல்லது.
- வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பதை உணர்ந்தால், உடனே கிராம்புகளை கற்பூரத்துடன் சேர்த்து இரவில் எரிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகும் மற்றும் வீட்டில் செல்வமும் அதிகரிக்கும் என சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |