வீட்டின் வாசலில் இந்த ஒரே ஒரு பொருளை வையுங்கள்.., பணம் கொட்டுமாம்
வீட்டில் செல்வம் செழித்து பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக இருக்கும்.
அதற்கு நாம் சில வாஸ்து முறைகளை கடைபிடித்தால் மட்டுமே லட்சுமி வீடுகளில் தங்கும் என சொல்லப்படுகிறது.
அந்தவகையில், வீட்டின் வாசலில் இந்த ஒரே ஒரு பொருளை வைத்தால் பணம் வீட்டில் அதிகரிக்கும்.
பணம் அதிகரிக்க உதவும் பொருள்
வீட்டின் வாசலில் துளசி செடியை வைத்து வழிபாடு செய்து வருவதால் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நிதி வளம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
ஏனெனில் துளசி வைத்திருப்பவர்கள் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படாது என கூறப்படுகிறது.
இந்து மதத்தில் துளசி லட்சுமி தேவியாக கருதப்படுகிறது. ஏனெனில் லட்சுமி தேவி துளசியில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
பழங்காலத்திலிருந்தே துளசியை வழிபடுவதன் மூலம் வீட்டில் அமைதி நிலவும், அனைத்து ஆபத்துகளிலிருந்தும் விடுபடலாம் என சொல்லப்படுகிறது.
துளசி செடியை பராமரிக்க முடியாதவர்களுக்கு மற்றொரு வழியும் உண்டு. துளசி வேர், அருகம்புல் மற்றும் அரிசி ஆகியவற்றை சிவப்பு துணியில் கட்டி வீட்டின் வாசலில் தொங்கவிட வேண்டும்.
இதனால் வீட்டில் உள்ள எதிர்மறையான ஆற்றல்கள் நீங்கி வீட்டில் சண்டைகள் குறைந்து அமைதி நிலவும். மேலும், வீட்டில் நிதி பிரச்சனைகள் இருக்காது என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |