வெனிசுலா நெஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி: குறைந்தப்பட்சம் 16 பேர் பலி
வெனிசுலா நாட்டின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சாலை விபத்து
வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாகசோ நெடுஞ்சாலையில் இந்த திடீர் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிவேகமாக வந்த லாரி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த மற்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது.
TWITTER/@CPEREZAMPUEDA
இதில் 17 வாகனங்கள் வரை சேதமடைந்ததுடன் வாகனங்களில் திடீரென தீயும் பற்றி எறிய தொடங்கியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர், அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.
TWITTER/@CPEREZAMPUEDA
காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |