நாட்டைவிட்டு வெளியேற முயன்ற குடியேறி: திடீர் தடையால் அதிர்ச்சியடைந்த பெண்
அமெரிக்காவில் வெனிசுலாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது, அபத்தமான காரணத்தினால் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெனிசுலாவைச் சேர்ந்த யெலிட்சா பெரெஸ் என்ற பெண்ணின் கணவர், அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, குடிவரவு அதிகாரிகளால் யெலிட்சாவும் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தவிர்த்து, தனது இரண்டு பிள்ளைகளுடன் சுயமாக நாட்டைவிட்டு வெளியேற யெலிட்சா முயற்சித்துள்ளார்.
இதற்காக அவர் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு செயலியில் பதிவு செய்வது போன்ற பல வழிகளை முயற்சித்திருந்தார்.
கடவுச்சீட்டு சிக்கல்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது, யெலிட்சா தனது கடவுச்சீட்டை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார்.
குடியேறிகள் தாங்களாவே நாட்டைவிட்டு வெளியேறும் தங்கள் எண்ணத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும், அவ்வாறு செய்வதற்கு 3,000 டொலர் வரை நிதி ஊக்கத்தொகை வழங்கவும் குறிப்பிட்ட அந்த செயலி உதவுகிறது.
இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையம் வழியாக வெனிசுலாவிற்குத் திரும்ப அவர் முயன்றார். ஆனால், விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்போது வெனிசுலா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட Safe Pass என்ற அனுமதிச் சீட்டு ஒன்று அவருக்குத் தேவைப்படுவதாகவும், அது அவரிடம் அச்சமயம் இல்லை என்றும் காரணமாக கூறப்பட்டது. இந்நிகழ்வு மார்ச் மாதத்தில் அரங்கேறியது.
ஆவணப் பிரச்சனை என்ற எளிய தடையின் காரணமாக, அவர்கள் பல வாரங்களாக தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்
அதன் பின்னர் குறித்த ஆவணம் தனக்கு தேவை என்பதை உணர்ந்த யெலிட்சாவுக்கு அவரது கணவர் உதவியிருக்கிறார்.
கடந்த வார இறுதியில் யெலிட்சா தனது மகள்களுடன் மீண்டும் விமான நிலையத்திற்கு சென்று, தாய் நாட்டிற்கு செல்ல விமானத்தில் ஏறினார். அப்போது அவர் எடுத்த காணொளியில், 'கடவுளே, நன்றி' என்று கூறியதுடன், ஊடகத்திடம் 'நான் மட்டும் இல்லை... பல வெனிசுலா நாட்டினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்' என்றும் கூறியிருந்தார்.
யெலிட்சாவைப் போன்ற பல வெனிசுலா நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைத்தனர்; இது தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதை மிகவும் சவாலானதாக மாற்றுகிறது.
இதற்கிடையில், நாட்டை விட்டு வெளியேற 3,000 டொலர் வரை பணம் வழங்கப்பட்ட போதிலும், குடியேறிகள் சுயமாக வெளியேற தடுக்கப்பட்டதற்கான காரணம் அபத்தமானது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |