உலகக்கோப்பை இந்திய அணியில் பாண்ட்யாவிற்கு பதில் களமிறக்கப்படும் வீரர்? கசிந்த முக்கிய தகவல்
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ஒரு மாற்றம் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிளே ஆப் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த பிளே ஆப் சுற்றிற்கு சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதற்கிடையில் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாண்ட்யா அந்தளவிற்கு எந்த ஒரு சிறப்பான ஆட்டத்தையும் கொடுக்காத காரணத்தினால், அவர் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பிசிசிஐ எதிர்பார்த்த அளவிற்கு, எந்த ஒரு அதிரடி ஆட்டத்தையும் கொடுக்காத காரணத்தினால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை இறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், கொல்கத்தா அணியின் துவக்க வீரரான வெங்கடேஷ் அய்யர் தற்போது ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் பாண்ட்யாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் வெங்கடேஷ் அய்யரை இறக்குவது குறித்து பேச்சு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் டி20 உலகக்கோப்பை தொடர், அடுத்து நடைபெறவுள்ளதால், பிசிசிஐ இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளை தான், ஐசிசி-க்கு உலகக்கோப்பை அணிக்கான வீரர்களின் பட்டியலை கொடுப்பதற்கான கடைசி நாள் என்பதால், நாளை இதைப் பற்றி உறுதியான தகவல் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.