பிரித்தானியா மகாராணியாரின் அரண்மனையில் கருணைக்கொலை செய்யப்பட்ட 26 உயிர்கள்: சோகத்தில் மகாராணியார்
செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்புடையவர் பிரித்தானிய மகாராணியார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால், தொடர்ந்து அவர் தனது செல்லப்பிராணிகளை இழ்ந்து வருகிறார். சென்ற ஆண்டுதான் அவரது செல்ல நாய்க்குட்டிகள் இரண்டு உயிரிழந்தன.
இந்நிலையில், தற்போது அவருடைய 26 அன்னப்பறவைகள் கருணைக்கொலை செய்யப்படவேண்டிய ஒரு நிலை உருவானதையடுத்து, அவற்றையும் இழந்து கவலையடைந்துள்ளார் அவர்.
விடயம் என்னெவென்றால், இதுவரை மகாராணியாரின் அன்னப்பறவைகளில் ஆறு பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு அவை உயிரிழந்துவிட்டன. நேற்றும் ஒரு அன்னப்பறவை உயிரிழந்துள்ளது.
ஆகவே, பறவைக்காய்ச்சலை உண்டுபண்ணும் வைரஸ் பரவல் ஏற்படலாம் என்ற அச்சத்தின் பேரில், மகாராணியாரின் 26 அன்னப்பறவைகள் கால்நடை மருத்துவர்களால் கருணைக்கொலை செய்யப்பட்டன.
ஆக, மொத்தம் 33 அன்னப்பறவைகளை இழந்ததால், மகாராணியார் கவலையடைந்துள்ளதாக, அவரது அன்னப்பறவைகளை வளர்ப்பவரான David Barber என்பவர் தெரிவித்துள்ளார்.