வியன்னா அருங்காட்சியகத்தில் திருட்டு: பல மில்லியன் மதிப்பிலான வைர நெக்லஸ் கொள்ளை
Vienna Museum: Million-Dollar Diamond Necklace stolen: வியன்னா அருங்காட்சியகத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான வைர நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வியன்னா அருங்காட்சியகத்தில் திருட்டு
வியன்னாவில் உள்ள பண்பாட்டு கலை அருங்காட்சியகத்தில் இரண்டு நபர்கள் நடத்திய திருட்டு சம்பவத்தில் பல மில்லியன் மதிப்புள்ள பிளாட்டினம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பார்வையாளர்கள் போல் அருங்காட்சியகத்திற்கு நுழைந்த இருவர், நேராக வான் கிளீஃப் அண்ட் ஆர்பெல்ஸ்' (Van Cleef and Arpels) நிறுவனத்தின் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றனர்.

பின்னர் சுத்தியலை கொண்டு அங்கிருந்த கண்ணாடி பெட்டியை உடைத்து விட்டு அங்கிருந்த விலைமதிப்பற்ற நகையை திருடி கொண்டு தப்பியோடியுள்ளனர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் முகமூடி எதுவும் அணியாத நிலையில், அவர்கள் இருவரின் முகமும் துல்லியமாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்ய ஆஸ்திரியாவின் எல்லைகளைத் தாண்டி தேடும் பணியை அதிகாரிகள் முடக்கிவிட்டுள்ளனர்.
அரச பாரம்பரிய நகைகள் திருட்டு
இந்த திருட்டு சம்பவத்தில் முக்கியமாக முன்னாள் எகிப்து ராணி நாத்லிக்கு சொந்தமான 200 காரட் கலைப்படைப்பு குறிவைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த நகையில் கிட்டத்தட்ட 673 விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நகையானது ஈரானி எதிர்கால ஷாவாக உருவான ரெசா பஹ்லவிக்கும் எகிப்து ராணியின் மகள் ஃபெளசியாவுக்கும் நடந்த திருமணத்திற்காக 1939ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |