ஒரே ஒரு தேர்தல்... 89 அரசியல்வாதிகள் பகிரங்கமாக படுகொலை
மெக்சிகோவில் இடைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இதுவரை 89 அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய வரலாற்றில் இரத்தக்களரி மிகுந்த தேர்தல்களில் ஒன்றாக இதை நிபுணர்கள் வர்ணித்துள்ளனர். மெக்சிகோவில் இடைத்தேர்தலுக்கான 200 நாட்கள் நீண்ட பரப்புரைகள் முடிவுக்கு வந்துள்ளன.
ஜூன் 6ம் திகதி வாக்குப்பதிவு முன்னெடுக்கப்படும். இதில் 15 மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட மொத்தம் 20,000 பதவிகளுக்கான தெரிவு முன்னெடுக்கப்படுகிறது.
200 நாட்கள் நீண்ட தேர்தல் பரப்புரையில் 35 வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 89 அரசியவாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது 782 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகிய்யுள்ளன.
சொத்துக்களை சேதப்படுத்துவது, கடத்தல், குடும்ப உறுப்பினர்கள் மீது வன்முறை உள்ளிட்ட பலவேறு சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இதில் 75% தாக்குதல்களும் எதிர்க்கட்சிகல் மீதே நடத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பெரும்பாலான அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சியினரே. அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய அரசியவாதிகளே குறிவைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
2018 பொதுத் தேர்தலில் மொத்தம் 774 வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தது. மட்டுமின்றி 152 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
2015 இடைத்தேர்தல் தொடர்பில் சுமார் 9 மாதங்களாக 61 அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.